அத்தகையவர்கள் எந்த ஒரு ஆடையையும் அணியலாம். ஆனால் சிலருக்கு கால்களில் அதிகப்படியான முடி இருக்கும். கால்களில் உள்ள முடியை நீக்குவதற்கு வாக்சிங் செய்வார்கள். இவ்வாறு கால்களுக்கு வெறும் வாக்சிங் செய்தால் மட்டும் கால்கள் மென்மையாகிவிடாது.
அதற்கு வாக்சிங் செய்த பின்னர் ஒருசில செயல்களை பின்பற்ற வேண்டும். வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களைக் கொண்டு கால்களை பராமரித்து வந்தால், நல்ல அழகான, பட்டுப் போன்ற கால்களைப் பெறலாம். இப்போது மென்மையான கால்களைப் பெற என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
• தினமும் குளிக்கும் முன் அல்லது இரவில் படுக்கும் முன், நறுமண எண்ணெய்களைக் கொண்டு கால்களை நன்கு மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாக மசாஜ் செய்யும் போது, கீழ் நோக்கியவாறு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் கால்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து, கால்கள் வறட்சியின்றி மென்மையாக இருக்கும்.
• கால்களின் அழகை அதிகரிக்க வேண்டுமெனில், குளித்த பின்னர் ஒரு வாளியில் தண்ணீரை ஊற்றி, அதில் ரோஜா இதழ்கள் அல்லது ரோஸ் வாட்டரை கலந்து, அதில் கால்களை ஊற வைக்க வேண்டும். இதனால் கால்கள் நல்ல மணத்துடன் இருப்பதோடு, கால்களும் பொலிவாக காணப்படும்.
• கால்களின் பொலிவை அதிகரிக்க, குளிப்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் பாலைக் கொண்டு நன்கு மசாஜ் செய்து, பின் குளிர்ச்சியான நீரில் அலச வேண்டும்.
• உருளைக்கிழங்கு துண்டைக் கொண்டு கால்களை தேய்த்தால், கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, கால்கள் பளிச்சென்று காணப்படும். இதை வாரம் 4 முறை செய்ய வேண்டும்.
• எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து கலந்து, அதனை கால்களில் தடவி மேல் நோக்கியவாறு தேய்த்து, குளிர்ச்சியான நீரில் அலசினால், கால்களின் பொலிவு அதிகரிக்கும். இந்த செயலை வாக்சிங் செய்த பின்னர் செய்ய வேண்டாம். ஏனெனில் சில நேரங்களில் இது சருமத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
- மேற்கூறியவற்றையெல்லாம் வாக்சிங் செய்த பின்னர் தினமும் மேற்கொண்டு வந்தால், நிச்சயம் நல்ல பொலிவான பட்டுப் போன்ற கால்களைப் பெறலாம்.