முகச் சுருக்கம் நீங்க காரட் உதவுகிறது. முதலில் ஆலிவ் எண்ணெயினால் முகத்தை மஸாஜ் செய்ய வேண்டும். பின்னர் முகத்தைக் கழுவாமல் ஒரு காரட் சாற்றுடன் கடலைமாவு இரண்டு ஸ்பூன் கலந்து பூசி அரைமணி நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் ஒரு மாதத்தில் நல்ல பலன் தெரியும்.


முட்டையை உடைத்து, அதனுடன் சில துணி எலுமிச்சை சாற்றைச் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை சுருக்கம் விழுந்துள்ள பகுதிகள் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி உலர விடுங்கள். பிறகு கழுவி விடுங்கள்.

அடுத்து நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தை எடுத்து பசைபோல் அதைச் செய்து தடவிக் கொள்ளுங்கள். அரைமணி நேரம் ஊறிய பிறகு நன்றாக கழுவிவிடுங்கள். சுருக்கங்கள் விழுவது தள்ளிப்போகும்.

பசும்பாலில் சிறிதளவு கிளிசரின் கலந்து இரவில் படுக்கச் செல்லும்முன் முகத்தில் மேல்நோக்கி மென்மையாக மஸாஜ் செய்து பின் கழுவி வந்தால் முகச்சுருக்கம் மறைந்துவிடும்.

ஒரு டேபிள் ஸ்பூன் தேனுடன்  ஸ்பூன் காரட் சாறு கலந்து முகத்திலும் கழுத்திலும் தடவி 15 நிமிடங்கள் நன்றாக உலர விடவும். நன்றாக உலர்ந்தது பஞ்சை வெதுவெதுப்பான நீரில் நனைத்துத் துடைக்கவும். தினமும் ஒரு முறை இவ்வாறு செய்துவர மெல்லிய முகச் சுருக்கங்கள் மறையும்.

கிளிசரினுடன் சிறிது தேன் சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

ஒரு கனிந்த வாழைப்பழத்துடன் பன்னீர் கலந்து முகத்தில் தடவி ஒரு மணிநேரம் உலரவிடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். தினமும் தொடர்ந்து இம்மாதிரி செய்துவர முகச் சுருக்கங்கள் நீங்குவதோடு முகம் மென்மையாகும்.

ஒரு டீஸ்பூன் முட்டைக்கோஸ் சாறுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் உலரவிடவும். நன்றாக உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இம்மாதிரி தொடர்ந்து செய்து வந்தாலும் முகச்சுருக்கம் நீங்கும்.

முகச்சுருக்கம் நீங்க பார்லர்களில் செய்யப்படும் டைட்டனிக் ஃபேஷியல் செய்து கொள்ளலாம். ஆக்ஸிஜன் கலந்த நைட் க்ரீமை வாங்கித் தினமும் தூங்கப் போவதற்கு முன் தடவிக் கொள்ளலாம்.

1 டீஸ்பூன் தக்காளி சாறு, 1 டீஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, சில சொட்டுகள் எலுமிச்சை சாறு, பால் சிறிதுடன் ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊறவிட்டு கழுவ, மாசுமறுவற்ற முகத்துடன் நிறமும் முகத்திற்கு கூடுதலாகும்.

சருமம் மிருதுவாக ஆக தக்காளி சாறுடன் சிறிது பீட்ரூட் சாறு எலுமிச்சை சாறு சேர்த்து தடவவும்.

முகப்பருக்கள் மறைய 2 டீஸ்பூன் முல்தானி மெட்டியுடன் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் (பன்னீர்). கற்பூர லோஷன்  டீஸ்பூன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் தண்ணீரில் கழுவி வரவும். ஒரு வாரத்திற்கு இரண்டுமுறை செய்யவும்.


Powered by Blogger.