கோடையிலும் குளு குளு சருமத்திற்கு கேரட் ஃபேசியல் மாஸ்க்!
கோடைகாலத்தில் சருமப் பாதுகாப்பு என்பது ரொம்பவே கஷ்டமான ஒன்று. முக்காடு போட்டபடி போவோரை அதிகம் பார்க்கலாம். அந்த அளவுக்கு சூரிய பகவான் சுட்டுத் தள்ளி விடுவார் இந்த கோடைகாலத்தில். தற்போது நாம் மாசடைந்த சுற்றுசூழலில் வாழ்ந்து வருகிறோம். இதனால் சருமமானது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்‘ என்று சொல்வார்கள். ஆகவே நாம் நமது சருமத்தைக் காக்க வேண்டியுள்ளது.
இந்த கோடையில் சூரிய கதிரானது நம் சருமத்தில் நேராகப் படுவதால் நம் சருமத்திற்கு தேவையான சத்தானது குறைந்து வறண்டு விடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் சருமத்தை அக்கறையுடன் காக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. கோடை கால வெயில் கொடுமையிலிருந்து நமது சருமத்தைப் பாதுகாக்க எத்தனையோ லோஷன்கள் உள்ளிட்டவ இருக்கின்றன. இருந்தாலும், நாம் செயற்கை முறையில் பாதுகாப்பதை விட இயற்கை முறையில் நம் வீட்டில் இருக்கும் கேரட்டை பயன்படுத்தி பாதுகாக்கலாம்.
கேரட் நம் உடலுக்கு மட்டும் உகந்தது அல்ல, நம் சருமத்திற்கும் மிகவும் சிறந்தது. இந்த கேரட் ஃபேசியல் மாஸ்க்கை எண்ணெய் பசை மற்றும் சாதாரண சருமம் உள்ளவர்கள் செய்யலாம்.
சரி கேரட் ஃபேசியல் மாஸ்க் எப்படிச் செய்யலாம் என்பதைப் பார்ப்போமா...
கேரட் ஃபேசியல் மாஸ்க்
-செய்முறை
தேவையான பொருட்கள் :
2-3 கேரட் ,
1 ஸ்பூன் ஆலிவ் ஆயில் ,
1/2 ஸ்பூன் தேன் ,
லெமன் ஜூஸ்
பயன்படுத்தும் முறை:
கேரட்டை வேகவைத்து மசித்து கொள்ளவும் ,
பின்னர் அதனுடன் 1/2 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் ஆலிவ் ஆயில், லெமன் ஜூஸ், தேவையான அளவு தண்ணீர் கலந்து மாஸ்க் செய்யவும்.
பிறகு அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற விடவும்.
பின்னர் குளிர்ந்த நீரால் கழுவி விடவும்.
இதனால் முகமானது பொலிவுடன் அழகாகக் காணப்படும். பிறகென்ன கேரட்டை எடுங்க, பேசியல் மாஸ்க்கை செய்யுங்க, பொலிவான முகத்துடன் வெளியில் கிளம்புங்க..