தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறிய பின் வெது வெதுப்பான நீரீல் முகம் கழுவினால் முகப்பரு தொல்லை வராது. முல்தானி மெட்டி பொடியுடன் பன்னீர் கலந்து முகத்தில் தடவி 10, 15 நிமிடம் ஊறியபின் முகம் கழுவினால் முனம் பளிச்சென்று இருக்கும். 

பழுத்த பப்பாளியை மிக்ஸியில் அரைத்து எலுமிச்சை பழ ஜீஸ் விட்டு கலந்து முகம் உடலில் தடவி ஊறியபின் தேய்த்துக் குளித்தால் மருக்கள் கரும்புள்ளிகள் மறையும்.


பப்பாளி தோலினை அரைத்து முகத்தில் தடவி மஜாஜ் செய்து கொண்டால் சருமம் மற்றும் முக சுருக்கத்திற்கு குட்பை சொல்லிவிடலாம். அவை வராமலும் தடுக்கவும் செய்யும்.

முகம் சருமம் வரண்ட சருமமாக இருந்தால் பாலில் அரிசி மாவைக் கரைத்து அல்லது குழைத்து தடவி 1/2 மணி நேரம் கழித்து தேய்த்து கழுவி விடுங்கள். டெட் செல்லுங்கள் உதிர்ந்து விடும். சருமம் ட்ரை ஆகாது.

விட்டமின் ஈ ஆயிலை அல்லது ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெய் ஏதாகிலும் ஒன்றை தொடர்ந்து புருவத்திலும் இமையிலும் தடவி வந்தால் புருவம் இமை முடி கரு கரு என்று வளர்ந்து அழகு கொடுக்கும்.

முகம் சருமம் சாப்ட் ஆக இருக்க பாசிப்பருப்பு அல்லது கடலை பருப்பு அரைத்து வைத்துக் கொள்ளவும். ஏதாகிலும் ஒரு மாவைசிறிது தயிருடன் கலந்து முகத்தில் உள்ள இறந்த செல்கள் உதிர்ந்து சருமம் முகம் பட்டுபோல் சாப்ட் ஆகிவிடும்.

கறிவேப்பிலை இளம் தளிர் இலைகளைத்  காய வைத்து பொடியாக்கி அதை தேங்காய் எண்ணெய்யில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி கரு கரு என்று வளரும்.

வெந்தயத்தை ஊற வைத்து கறிவேப்பிலை இலை சேர்த்து அரைத்து தலையில் தடவி 10 நிமிடம் ஊறியபின் தலை தேய்த்துக் குளித்து வந்தால் முடி  சாப்ட் ஆகி பட்டு போன்றும் வேர்க்கால் பலம் பெற்று முடி உதிராது வளரும்.


புளிப்பு தயிர்2 ஸ்பூன் கடலை மாவு கலந்து தலையில் தடவி ஊறிய பின் தலை தேய்த்துக் குளித்தால் அழுக்குகள் நீங்கும்.

தலை முடி நன்கு வளர முருங்கை இலை சூப் வைத்து தினசரி குடித்து வரலாம். தலை முடியும் வளரும். முடியும் உதிராது. வழுக்கை தேங்காய் அரைத்து தலையில் தடவி ஊறியிபின் சீயக்காய் பொடி தேய்த்து தலை அலசி குளித்து வந்தால் முடி உதிராமல் பாதுகாக்கலாம்.வழுக்கை தேங்காய் கமுகை தேங்காயும் தேய்த்து அலசலாம்.

ஆப்பிள் சாறு வெந்தயத்தூள், சீயக்காய் தூள் ஆகியவற்றை சம அளவு எடுத்து வெந்நீரில் கலந்து தடவி ஊறிய பின் தலை தேய்த்து அலசினால் முடி பிசு பிசுப்பு நீங்கி விடும். 

சாதம் வடித்த பழைய கஞ்சியில் சீயக்காய் பொடி கலந்து தடவி குளித்தாலும் உடல் சூடு தணியும். சூட்டினால் முடி கொட்டுவது நிற்கும். முடியும் அழுக்கி நீங்கி பட்டுபோல பிரகாசமாக இருக்கும்    
    
Powered by Blogger.